எல்லை மீறுபவர்கள் அழிக்கப்படுவர்...

ஆய்வுகள் | by -மௌலவி யூனுஸ் தப்ரீஸ் On Aug 03, 2023 Viewers: 332


எல்லை மீறுபவர்கள் அழிக்கப்படுவர்...

எல்லை மீறுபவர்கள் அழிக்கப்படுவர்...

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ்

இஸ்லாம் மார்க்கம் அமைதியான மார்க்கம். நீதியாக, நேர்மையாக நடுநிலையாக நடந்து கொள்ள வழிக்காட்டும் மார்க்கமாகும்.

நாம் நடுநிலைமையோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வேண்டி, பின் வரக்கூடிய குர்ஆன் வசனத்தின் மூலமாக மக்களுக்கு அல்லாஹ் இப்படி வழிக்காட்டுகிறான்.

" இதே முறையில் நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம்...(2:143)

நடுநிலைமையான சமுதாயம் என்று சொன்னால் நீதியாக, நேர்மையாக, யாருக்கும் அநியாயம் செய்யாமல், நடுநிலைமையோடு நல்ல முறையில் சாட்சியாளர்களாக இருக்க வேண்டும் என்பதைத்தான் இந்த வசனத்தின் மூலமாக அல்லாஹ் விரும்புகின்றான்.

ஒரு மனிதன் நடுநிலை இழந்து, எல்லை மீறுவானேயானால் அவன் அழிவது நிச்சயம் என்பது வரலாறுகள் சாட்சியாக இருக்கின்றன.

" எல்லை மீறுபவர்கள் அழித்தனர் என்று மூன்று முறை நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். (முஸ்லிம் -5185)

தன்னிடத்தில் இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி அல்லது செல்வத்தை பயன்படுத்தி அல்லது பலத்தை பயன்படுத்தி அல்லது அறிவை பயன்படுத்தி எல்லை மீறி போகும் போது தன்னை அறியாமல் பிறருக்கு அநியாயம் செய்ய வேண்டிய ஒரு நிலைமைக்கு மனிதன் மாறி விடுகிறான்.

எல்லை மீறி, அநியாயம் செய்யக்கூடிய ஒவ்வொருவருக்கும் பின்னால் மேற் சுட்டிக்காட்டிய அம்சங்களே பிரதானமாக காணப்படும்.

இவைகள் எங்களை காப்பாற்றும் என்ற மமதையில் அநியாயங்களையும், அட்டூழியங்களையும் பகிரங்கமாக செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும். என்பது போல தன்னிடத்தில் இருக்கும் ஆட்சி, அதிகாரங்கள், படைப்பலம், பொருளாதாரம் இவைகளை நம்பி தன்னையே இழக்க வேண்டிய துர்பாக்கியத்தில் மனிதன் சிக்கிக் கொள்கிறான்.

வீட்டுத் தலைவன் முதல் பஞ்சாயத்து தலைவர் வரையும், அதேபோல் ஆட்சி தலைவன் முதல் சாமானியன் வரை சகல விஷயங்களிலும் நிதானமாகவும், அவசரம் இல்லாமல் நடு நிலைமையோடு நடந்து கொள்ள வேண்டும்.

என்னிடத்தில் ஆட்சி இருக்கின்றது, அதிகாரம் இருக்கின்றது, பலம் இருக்கின்றது, படை இருக்கின்றது, என்னை யாரும் தட்டிக் கேட்க முடியாது என்ற ஆணவத்தில் பிறருக்கு அநியாயம் செய்வாரேயானால், ஆணவத்தின் முடிவு இழிவான அழிவாகும்.

மூஸா நபி காலத்தில் காரூன் என்பவன் பெரும் செல்வங்களுக்கு அதிபதியாகவும், பிர்அவுனுடைய அரச சபையில் அமைச்சராகவும் இருந்தான். பிறரை இழிவாக கருதியதோடு,  தன்னைவிட யாரும் உயர்ந்தவர்கள் கிடையாது என்ற மமதையில் உயர்ந்த மாளிகையை கட்டி, அந்த மாளிகைக்குள் நுழைவதற்காக வேண்டி, தனது படைகள் புடை சூழ பெருமையோடு வீதியிலே பவனி வரும் பொழுது, அவனையும், அவனது மாளிகையையும் நேரடியாக மக்கள் பார்த்துக்கொண்டிருக்க அல்லாஹ் பூமியால் அவனை விழுங்க வைத்தான்.

எல்லை மீறிய பெருமையின் இறுதி முடிவு இப்படித்தான் அமையும். இருந்த இடம் தெரியாமல் அல்லாஹ் ஆக்கி விடுவான்.

மேலும் பிர்அவுன் தன்னை உயர்ந்த கடவுள் என்று தன்னைத்தானே பிரகடனப்படுத்திக் கொண்டான். தனது ஆட்சிக்கு கீழ் உள்ள மக்களை கொத்தடிமைகளாக பயன்படுத்தி, அநியாயம் செய்து வந்தான். தனக்கு எதிராக ஆண் குழந்தை  பிறக்கப் போகின்றது என்ற தகவல் கிடைத்தவுடன், பிறக்கக்கூடிய ஆண் குழந்தைகளை எல்லாம் ஈவிரக்கமின்றி தனது கூலிப்படைகளை வைத்து கொத்துக்கொத்தாக கொலை செய்தான்.

இறுதியில் பிர்அவனுடைய அழிச்சாட்டியம் தாங்க முடியாமல் மூஸா நபியும், அவரது தோழர்களும் நாட்டை விட்டு தப்பித்து வெளியேறும் போது இதை கேள்விப்பட்ட பிர்அவுனும் அவனது கூலிப்படைகளும் இவர்களை கொல்வதற்காக வேண்டி ஆயுதங்களோடு விரட்டி வருகின்றார்கள். அல்லாஹ் தனது அற்புதத்தால் நைல் என்ற  (செங்) கடலை பிழக்க வைத்து மலை போன்ற வழிகளை மூஸா நபிக்கும், அவரது தோழர்களுக்கும் ஏற்படுத்திக் கொடுத்தான்.

கொலை வெறியோடு விரட்டி வந்த பிர்அவுனும், அவனது கூலிப்படைகளும் அதே கடல் வழியாக போகும்போது, அல்லாஹ் அந்த கடலை ஒன்று சேர்த்து, பிர்அவுனையும், அவனது கூலிப்படைகளையும் துடிக்க, துடிக்க அழித்த வரலாறுகளை யாரும் மறக்க முடியாது.

நான் தான் உயர்ந்த கடவுள் என்றான், என்னிடத்தில் ஆட்சி இருக்கின்றது என்றான், அதிகாரம் இருக்கின்றது என்றான், படை இருக்கின்றது என்றான், பலம் இருக்கின்றது என்றான், பொருளாதாரம் கொட்டி கிடக்கின்றது என்ற அராஜகத்தின் உச்சகட்டத்தில்  பிறர் விஷயத்தில் எல்லை மீறி நடந்தான். அநியாயத்தின் உச்சக்கட்டத்தில் மிதந்தான்.  சரியான சந்தர்ப்பத்தில் அவன் இருந்த இடம் தெரியாத அளவிற்கு இழிவான முறையில் அவனையும், அவனது கூலிப்படைகளையும் அல்லாஹ் அழித்தொழித்தான். அவனை சூழ இருந்த எதுவும் அவனை காப்பாற்ற முடியவில்லை.

இப்படித்தான் எல்லை மீறிய ஆணவக்காரர்களின் இறுதி முடிவை வரலாறு நெடுகிலும் காணலாம்.

ஆரம்ப காலத்தில் இருந்து இன்றைய காலம் வரை அநியாயக்காரர்களுடைய முடிவுகளை அந்தந்த மக்கள் நேரடியாக கண்டு வருகிறார்கள். அநியாயக்காரர்கள் நிலைத்தது கிடையாது.

துள்ளியமாடு பொதி சுமக்கும் என்பதற்கு இணங்க.

தண்டனை வர சற்று கால தாமதமானாலும், அநியாயக்காரர்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது.

உப்பு திண்டவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்.

தனது எதிரிகள் என்ற அடிப்படையிலும், சிறுபான்மை என்ற அடிப்படையிலும், ஒடுக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையிலும், பலகீனமானவர்கள் என்ற அடிப்படையிலும், மத ரீதியாகவும், அநியாயங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

எரிகிற நெருப்பில் குளிர் காய்வது போன்று,  அநியாயங்களை தூண்டி விட்டு, ஆட்சி கட்டிலில் உல்லாசமாக இருக்க பார்க்கின்றார்கள்.

அடுக்கடுக்கான அநியாயங்களை செய்து விட்டு, ஒன்றும் தெரியாத அப்பாவி போல் முதலை கண்ணீரும் வடிக்கிறார்கள். 

ஆடு நனைகிறது என்று, ஓநாய் அழுத கதைகளாக இன்றைய அநியாயக்காரர்களுடைய நடவடிக்கைகளை நாம் காணலாம்.

இவ்வளவு அநியாயம் செய்தும் இவர்கள்தானே இன்னும் ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருக்கிறார்கள். இந்த அநியாயக்காரர்களுக்கு அழிவு இல்லையா ? என்று பாதிக்கப்பட்டவர்களும் ஏனைய மக்களும் கேட்கக்கூடிய ஒரு நிலையை பரவலாக நாம் காணலாம். பொதுவாக ஒரு மனிதன் அநியாயம் செய்யும்பொழுது இறைவன் சில நேரங்களில் உடனே தண்டித்து விடுவான். அல்லது தொடர்ந்தும் பல விதமான அநியாயங்களை செய்ய வைத்து, அதற்குப் பிறகு ஒட்டுமொத்தமாக பயங்கரமான பிடியாக இறைவன் பிடிப்பான் என்பதைத்தான் வரலாறுகள் உண்மைப்படுத்துகின்றன.

"நிச்சயமாக உமது இறைவனின் பிடி மிகக் கடுமையானதாகும். (85:12)

பூனைக்கு அநியாயம் செய்த பெண்ணையே அல்லாஹ் கொழுந்து விட்டு எரியும் நரகத்தில் தூக்கி வீசுகிறான் என்றால், அப்பாவி மனிதர்களை அநியாயம் செய்த யாரையும் அல்லாஹ் சும்மா விட மாட்டான்.

அநியாயம் செய்யக் கூடியவர்களுக்கு கடுமையாக எச்சரிக்க கூடிய, சில குர்ஆன் வசனங்களை தொடர்ந்து கவனிப்போம்.

மேலும் "அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான். (14:42)

மேலும் 


"இன்னும், நிலைத்தவனாகிய நித்திய ஜீவனான (அல்லாஹ்வுக்கு) யாவருடைய முகங்களும் பணிந்து தாழ்ந்துவிடும்; ஆகவே எவன் அக்கிரமத்தைச் சுமந்து கொண்டானோ, அவன் நற்பேறிழந்தவனாகி விடுவான்.(20:111)

மேலும் ... நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பதை அவன் அறியவில்லையா அவ்வாறென்று, அவன் இதை விட்டும் விலகிக் கொள்ளவில்லையாயின் நிச்சயமாக அவனது முன்நெற்றி முடியை நாம் பிடிப்போம்.

 தவறிழைத்து, பொய்யுரைக்கும் அவனது முன்நெற்றி முடியாகும். எனவே அவன் தனது சபையோரை அழைக்கட்டும். நாம் (நமது) நரக காவலாளிகளை அழைப்போம். (96:14...)

மேலும்... நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள். (12:23)

மேலும்... அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். (11:18)

இப்படியான குர்ஆன் வசனங்கள் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு மன ஆறுதலாகவும், அநியாயக்காரர்களுக்கு கடுமையான வேதனையாகவும் உள்ளன என்பதை விளங்கி, நிச்சயமாக அநியாயக்காரர்கள் எந்த வழியிலும் தப்பிக்க முடியாது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதே நேரம் முஸ்லிம்களை பொருத்தவரை பொறுமையாக இருந்து, அமல்களை நிறைவாகவும், தொடராகவும் செய்வதோடு, அல்லாஹ் மீது முழு நம்பிக்கை வைத்து பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும்.

தனக்கு நெருக்கமான அடியார்களை அல்லாஹ் சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான்.

***

தேடல்
தொடர்புடைய பதிவுகள்
001 AlFathiha அத்தஹியாத் இருப்பில் விரலசைத்தல்! அன்பளிப்பு - உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 2 அரஃபா நோன்பு எந்த நாளில் பிடிக்க வேண்டும்? அரஃபா பேருரை! அரபியில்தான் குத்பாவா? அலைபேசி ஒழுக்கங்கள் அழிக்கப்பட்ட யானைப்படை!.. [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2] அழைப்பு கடிதம் (இந்துவுக்கு) அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் வழிமுறையை பின்பற்றுவோம் ஆட்சி மாற்றம்! அஞ்சத் தேவையில்லை! ஆண் குழந்தைகளுக்கு தங்கம் அணிவித்தல் ஆபாசத்தை தவிர்ந்து கொள்வது எப்படி...? இந்துக்களின் தாய்மதம் இப்ராஹீம் நபியும் காளைக் கன்றும்... இப்ராஹீம் நபியும் உயிர்த்தெழுதந்த பறவைகளும்... இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) மகத்தான வழிகாட்டிகள் - 5 இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) - 2 மகத்தான வழிகாட்டிகள் - 6 இமாம் மாலிக்(ரஹ்)_மகத்தான வழிகாட்டிகள்-2 இமாம் ஷாபிஈ (ரஹ்) இறுதி வரை ஏகத்துவம் இஸ்ரவேலரும் காளை மாடும்... இஸ்லாம் அழைக்கிறது! இறைவன் இருக்கிறானா ?அவன் ஒருவனா? பலரா? உணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 3 உள்ளங்களை வெல்வோம் – 5 உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 1 உஸைர் நபியும் உயிர் பெற்ற‌ கழுதையும்... உஸ்மான் (ரழி) கொலையும், கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்! என்னருமை தலித் சகோதரரே! எல்லை மீறுபவர்கள் அழிக்கப்படுவர்... ஒரு நடிகையின் வாக்குமூலம்! கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-1 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-2 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-3 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-4 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-5 கருப்பு பணத்தை ஒழிக்க ஒரே வழி! கரை ஒதுங்கிய மீன்களும்… குரங்குகளாக மாற்றப்பட்ட மீனவர்களும்… கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணும், பாலூட்டும் பெண்ணும் ரமலானில் நோன்பு நோற்க முடியாவிட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part -2 காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part-1 காலையா மாலையா? கிறிஸ்துவ சகோதரர்களுக்கு ஒரு கடிதம் கிலாஃபத் - இஸ்லாமிய ஆட்சி குகை தோழர்களின் கதை குணத்தை மாற்ற முடியுமா? குற்றம் செய்வோரை வெறுத்து ஒதுக்குவோம் குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் - தொடர்- 1 ! குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – 3 குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – தொடர்- 2 ! கேம் விபரீதங்கள் கேள்வி: அல்குர்ஆனின் 3:26, 27 வசனத்தில், நீர் சொர்க்கத்தில் நுழைவீராக! என்று அவருக்கு கூறப்பட்டது” என்று உள்ளது.? கேள்வி: கிளி உள்ளிட்ட பறவைகளை கூண்டில் அடைத்து வைத்து வளர்ப்பது ஆகுமானதா? அஸாருத்தீன், வில்லிவாக்கம், சென்னை. கேள்வி: நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கொள்ளை நோய் வந்த போது, இருப்பவர்கள் தங்கள் இடங்களில் இருந்து கொள்ளுங்கள். வெளியே இருப்பவர்கள் நோய் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றுதான் சொன்னார்கள். ஆனால் அந்த நேரத்தில் தொழுகைகளில் மாற்றம் செய்யவில்லை. தற்போது கொரானா காலத்தில் தொழுகைகளில் முகமூடி அணிந்து, சொல்கின்ற இடைவெளியில் வரிசையில் நின்று தொழுங்கள் என்ற நடைமுறை ஒத்துக்கொள்ளத் தக்கதா? ஷைத்தான் இடைவெளியில் புகுந்துவிடுவானே? விளக்கம் தரவும்! கொடிய மிருகங்களாக மாறிவிட்ட மதவெறியர்கள்! சத்திய சனாதன தர்மத்தை பின்பற்றுவீர்! சலஃப், சலஃபி சரியான புரிதல். தொடர்- 2 சலப், சலபி – சரியான புரிதல்! சுலைமான் நபியும்... ஹுத்ஹுத் பறவையும்... சூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு! சொர்கத்தில் துணைகள் ஜிஹாத் - ஒரு விளக்கம் ஜிஹாத் - ஒரு விளக்கம் [ பாகம்-2 ] தக்லீதின் எதார்த்தங்கள் தற்கொலை தீர்வாகுமா? தாய் மதம் திரும்பினார் யுவன் ஷங்கர் ராஜா திருக்குர்ஆன் கூறும் (உண்மைக்) கதைகள் - 01 திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும் துல்ஹஜ் மாதம் பிறை 11,12,13. உழ்ஹிய்யா கொடுக்கலாமா? தேவனுக்கு குமாரனா? தொழுகை உடைய "ரூக்ன்" என்று சொல்லப்படும் ஃபர்ள்களிலிருந்து ஏதேனும் ஒன்று விட்டு விட்டால் அதை எவ்வாறு சரி செய்வது? தொழுகை முடித்து திரும்புதல் பற்றிய ஹதீஸ் தோன்றின் எடுப்போடு தோன்றுக! – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 4 நபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்…?! நபியவர்கள் தங்க மோதிரம் அணிந்ததாக கூறப்படும் ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது ? -8 நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய நல்லறங்கள் நற்குணமும் நபியும் வழிகாட்டும் வாழ்வியல்- தொடர் 03 நல்ல மாற்றத்தில் ஏற்பட்ட தீய மாற்றம் நல்லோரும் செய்யும் தவறுகள் - 1 (வீட்டோடு மாப்பிள்ளை) நல்லோரும் செய்யும் தவறுகள் - 3 (மார்க்கத்தின் பெயரால் சச்சரவு) நல்லோரும் செய்யும் தவறுகள் - 4(பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்காத பெற்றோர்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 6 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 7 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள் - 2) நல்லோரும் செய்யும் தவறுகள் -2 பெண்களின் ஆடை - கவனம் தேவை நல்லோரும் செய்யும் தவறுகள்-5 ( பெண்ணுக்கு சொத்தில் பங்கில்லையா?) நெருக்கம் இறுதிவரை தொடரட்டும்..... பரக்கத்தை இழந்த ரஹ்மத்...! பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டும் தில்லி கலவரம் தொடர்பான புத்தகம் வாபஸ்! பிக்ஹுன் னவாஸில்= பிரச்சினையான சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம் புரிய சிரமமான வசனங்கள்-1 புரிய சிரமமான வசனங்கள்-2 புரிய சிரமமான வசனங்கள்-3 புறக்கணிக்கப்படும் நபியின் வழிமுறைகள் - தாடியை வளர்ப்பதும் மீசையைக் கத்தரித்தலும்! பேசிய எறும்பு... பொது சிவில் சட்டம் எனும் பூச்சாண்டி! மனிதநேயத்தை வென்ற மிருகநேயம்! மறுமையில் ஓர் உரையாடல்... மஸ்ஜிதின் ஒழுக்கங்கள் மார்க்கப்பணிக்கு ஊதியம் பெறலாமா? மீலாதும் மவ்லிதும் முஸ்லிம் எல்லாரும் ஜிஹாதி தான் முஹம்மதிய சமுதாயத்தின் காரூன்கள் முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கட்டிடத்தின் கடைசிக் கல் முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும் மூசா நபியும்... அதிசயப் பாம்பும்‌... மூஸா நபியும் ஹிள்ர் நபியும்! யார் இந்த அல்லாமா ஷேய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி(ரஹ்) யூனுஸ் நபியை விழுங்கிய பிரம்மாண்ட மீன்... ரமலானும் ஈமானும்! ரமளானின் கடைசி பத்து நாட்கள் ரமளானை பயனுள்ளதாக்குவோம் லவ் ஓம்’ ஐ மறைக்கவே லவ் ஜிஹாத் பூச்சாண்டி! வரலாற்றை திரிக்கும் வகுப்புவாதிகள் வழிகாட்டும் வாழ்வியல் - தொடர் 02 வழிகாட்டும் வாழ்வியல் - தொடர்:01 ஷேய்க்.முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமின்(ரஹ்) வாழ்க்கை வரலாறு ஷைத்தான்கள் பரவுதல் பற்றிய ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது? - 7 ஸகாத்துல் (ஸதகத்துல்) பித்ர் பற்றி விளக்கம்? ஸாமிரியும்… காளை மாட்டுச் சிலையும்… ஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-4] ஹஜ் உம்ரா தொடர்பான சந்தேகங்கள்! ஹதீஸ் எப்படி புரிவது-3 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 6 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 5 ஹதீஸ் எப்படி புரிவது?ஹதீஸ் - 4( தொழுகையை முறிக்கும் மூன்று) ஹதீஸ்_எப்படி புரிவது-1 ஹதீஸ்_எப்படி புரிவது-2 TEACHERS TRAINING COURSE